டாஸ்மாக் கடை எண் 305-ல் கடவுள்!


கடவுள் ஒருமுறை டாஸ்மாக் சென்றிருந்தார்!

லோக்கல் பாரில் டைட் ஜீன்ஸ், டீசர்ட்டில் ஹிப் தெரியுமாறு ஒரு பொண்ணு உள்ளே போனால், அனைவரும் விழிகளும் எப்படி பார்க்குமோ அப்படி பார்த்தனர்! 




தெய்வீக முகம், இதுவரை நுகரப்படாத வாசனை, ஒரு டேபிளில் சென்று அமர்ந்தார், குமார் இங்க வாப்பா என்றார்! ”உங்கள இதுக்கு முன்னாடி பார்த்த்தே இல்ல, இந்த பாருக்கு இப்பதான் புதுசா வறீங்களா சார் என்றான்?

திருவிளையாடல் படம் சிவாஜி போல் சிரித்துவிட்டு, ”நாலு புல்லு” ஒரே ஒரு டம்ளர் போதும் என்று சில ஆயிரங்களை கொடுத்தார்.

சார் சைடிஸ்?!

எதுவும் வேண்டாம்ப்பா!

அதிர்ந்து பார்த்தவன்!! சார் எனக்கு மாச சம்பளமே 600 தான் டிப்ஸ் கொடுக்கவாது எதாவது சாப்பிடுங்க சார் என்றான் குமார்.

(நகரத்தில் இருக்கும் டாஸ்மாக் அது! குமார் தினமும் 80லிருந்து 100 கஸ்டமர்களுக்கு மேல் பார்க்க்கூடியவன் குறைந்தபட்சம் ரூபாய் 10லிருந்து 50 ரூபாய் வரை டிப்ஸ் வாங்குவான், போனமாதம் அவனுடைய சம்பளத்துடன் குமார் சம்பாரித்த்து 32,825 ரூபாய் என்று குமாரின் தலைக்குமேல்) Call Out Symbol வந்து நின்றது.

கடவுள் சிரித்துக் கொண்டே, மீன் கருவாடு ஒரு ப்ளேட் மட்டும் கொண்டுவா என்றார்.

பக்கத்து டேபிளில் 35 வயதுடைய ஒருவர் மப்பில் மல்லாக்க படுத்து ஹாயாக தூங்கி கொண்டிருந்தார், அவர் இதே நேரம் கிட்னி பெயிலரில் ஆஸ்பத்திரியில் உறங்கி கொண்டிருப்பார் என கடவுளுக்கு தெரிந்தது!

குமார் சரக்கையும், மீன் கருவாடையும் கொண்டு வந்து வைத்தான் குமார்.
”பெண்களை கற்பழித்தவன், குழந்தைகளை வண்புணர்வு செய்தவன், பெண்கள் முகத்தில் ஆசிட் அடித்தவன், காதலிக்க மறுத்த்தால் கத்தியால் குத்தியவன் என்று எல்லாரும் ஒரே ப்ளேட்டில் மீனாக செத்து கிடந்தார்கள்!

இரண்டாவது டேபிளில் பார்மல் டிரெஸ்ஸில் 10,000 ரூபாய்க்கு புதியதாக வேலைக்கு சேர்ந்து, ரேஞ்சு பார்த்து பேசும் ஒருவன், குமார் பிச்சகார நாயே சைட்டிஸ் கொண்டு வரதுக்கு இவ்வளவு நேரமா? என்று கத்திக் கொண்டிருந்தான்! குமாரின் ரேஞ்சு தெரியாமல்.

கடவுள் பார்த்துக் கொண்டிருந்தார்.




மூன்றாவது டேபிளில் ”மச்சான் என் பொண்டாட்டி 2500ரூபாய் கேட்டாட, பெட்ரோலுக்கு 200ரூபாய் வேனும் வேற காசு இல்லாட, நீயே பில் பே பண்ணிருடா என்றிருந்தான், அன்று இரவு DRUNK & DRIVEல் போலீஸிடம் மாட்டி 2500ருபாய் பைன் கட்ட போறான் என்று தெரியாமல்!

நான்கவது டேபிளில் நான்கு பேருடன் ஒரு பள்ளி மாணவன் உட்கார்ந்து சில்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தான், பின்னாளில் அந்த மாணவன் தன் நண்பர்களுடன்  சேர்ந்து மதுவுக்கு அடிமையாகி, பள்ளி படிப்பை பாதியிலே நிறுத்தி அவன் வாழ்கை சின்ன பின்னாமென்று போகும் என்பதை கடவுள் நன்கறிந்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நால்வரும் இதற்கு முன்பு இதே மாதிரி சில்லி சாப்பிட்டவர்களே!

ஐந்தாவது டேபிளில் திருமணம் ஆக போகும் 25 வயதுடைய வாலிபன் அதிக குடி பழக்கத்தால் அவன் குழந்தையை பெற்றெடுக்க முடியாதவனாக அன்று ஆகப் போகிறான்! எதுவும் தெரியாமல் சந்தோஷமாக இருந்தான்.

ஆறாவது டேபிளில் தனியாக ஒருவன், அதிகமாக குடித்திருந்தான், அன்றிரவு அவனால் ஒரு பெண் கற்பை இழக்க போகிறாள்.

”இதற்கிடையில் ஒவ்வொரு புல்லாக போய் கொண்டிருந்தது! குமார் கவனித்துக் கொண்டே இருந்தான்”

அதற்கு அடுத்த டேபிளில் டேய் மச்சி நான் எதிர் பார்த்த மாதிரியே பெண் குழந்தை பொறந்திருக்கு, இனிமேலாவது நல்லா பார்த்துக்கனும், ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா இன்னொரு பியர் சொல்லு மச்சி!!!

// அன்று இரவே DRUNK & DRIVE வினால் சாலை விபத்தில் மரணமடைந்து, தன் காதலித்த பொண்னையும், தன் மகளையும் அநாதையாக்க போவது தெரியாமல் இன்னோரு பியரை ஆர்டர் செய்தான். //

எல்லாமே கடவுளுக்கு தெரிந்திருந்தது!
கடவுள் கடைசி வரை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்!

கடைசி டேபிளில் ஒருவன் கறுப்பு கலர் சட்டையும், காவி கலர் வேஷ்டியும் கட்டிருந்தான் ”கடவுளே 0.0000001 கன மில்லி நொடி குழம்பிவிட்டார்!!! ””யார்ரா இவன்”” என்று… அவனை அப்படியே கண்டுக்காமல் திரும்பினார்.

நான்கு புல்லும் முழுவதும் முடிந்திருந்த்து, சைடிஸ் அப்படியே இருந்தது,
குமாரை கூப்பிட்டு இன்னொரு புல்லை ஆர்டர் செய்தார்!
குமாரோ அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றான்,
இங்க பாருங்க சார் ஒரு குவாட்டர் அடிச்சிட்டு மல்லாக்க படுத்து தூங்கிட்டுருக்கு!
நீங்க எப்படி சார் 4 புல்லு அடிச்சும்…!!! ”மப்பு ஏறலியான்னு கேட்டான்???!!

”எனக்கு எந்த போதையும் ஏறாது ஏன்னா நான் கடவுள் என்றார்”

சார் உங்களுக்கு மப்பு அதிகமாயிருச்சு வீட்டுக்கு கௌம்புங்க என்று, அடுத்த கஸ்டமரை பார்க்க சென்றான் குமார். 

டிஸ்கி

  • இந்த பதிவு ஒரு ஜோக்கில் இருந்து யோசித்து வாரப்பத்திரிக்கைக்காக எழுதி 25-July-2015 அன்று டைம்பாஸ் விகடனில் வெளியானது
  • அதன் சுட்டி http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108389

1 comment:

  1. அருமை! இதை டாஸ்மாக்கில் பெரிய எழுத்தில் பிரிண்ட் செய்து போஸ்டராக ஓட்டினால் பலரின் வாழ்க்கை காப்பற்றப் படும்.

    amas32

    ReplyDelete